கடுமையான பனிப்பொழிவு காரணமாக வரும் மே 8, 2023 ஆம் தேதி வரை கேதார்நாத் தாம் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகமுக்கியமான நிகழ்வானது கேதார்நாத் யாத்திரை. இதற்கு இந்தியா மற்றும் இல்லாமல் உலகளவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த வருடமும் அது போல கேதார்நாத் தாமுக்கு பக்தர்களின் வருகை அதிகாமாக இருந்தது. ஆனால் வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அவ்வப்போது பக்தர்களின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் இன்று காலை முதல் கேதார்நாத் தாமிற்கு மக்கள் வரலாம் என்று வெளியானது.
ஆனால் இன்று உத்தரகாண்ட் அரசு மே 8 ஆம் தேதி வரை கேதார்காதியில் சீரற்ற வானிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கேதார்நாத் தாமுக்கான பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, மே 4 ஆம் தேதி வரை 1.23 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் தாமுக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…