பணக்கார கோயில் என்று நம்மிடம் யாராவது கேட்டால் திருப்பதியை கைகாட்டுவோம். திருப்பதி பாலாஜி பணக்கார கடவுள் தான் ஆனால் கேரளாவில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலும் கனவில் நினைத்து பார்க்க முடியாத அளவு செல்வங்களைக் கொண்டதாகும். இந்த பதிவு பத்மனாப சுவாமி செல்வத்தைப் பற்றி அல்ல..... இந்த பதிவு யாராலும் நம்ப முடியாத ஓர் உயிர்க்கொல்லி மிருகம் ஆழ்வாராக பார்க்கப்படும் கோயில் முதலையைப் பற்றியது ஆகும்.
முதலையாழ்வார் (Kerala Temple Crocodile )
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான இந்த திருவனந்தபுர பத்மனாப சுவாமி கோயில் 1729 இல் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இக்கோயில் இருக்கும் 6 பாதாள அறை இவ்வளவு பிரபலமோ அதேபோல இந்த கோயிலில் இருக்கும் முதலையும் பிரபலமானதாகும்.
பூஜை நேரங்களில் குளத்தில் இருந்து வந்து இறைவனை தரிசித்து விட்டு பிரசாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதியாக திரும்பி விடும். இதனால் இந்த முதலை முதலையாழ்வார் பபியா என்றழைப்பட்டது.
உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்லாமல் கோவில் பிரசாதத்தை மட்டும் உண்டு வாழ்ந்து வந்த முதலை ஆழ்வாருக்கு சைவ முதலை என்ற பெயரும் உண்டு. இதுவரை எந்த உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இறைத் தொண்டு செய்வது மனிதம் மட்டுமல்ல மிருகமும் செய்யும் என்பதை விளக்கும் வண்ணம் வாழ்ந்த இந்த முதலையாழ்வார் உடல்நல குறைவால் நேற்று (9.10.2022) வைகுண்ட ப்ராப்தம் அடைந்தார். இந்த முதலை ஆழ்வாருக்கு பக்தர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி தங்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…