காலில் அணியும் ஷூவுக்குள் ஒளிந்திருந்த நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் மைசூரில் ஒருவர் வாசலில் கழற்றி விட்டிருந்த ஷூவை எடுத்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வருவதைக் கண்டு உஷாரானார். பின்னர் மெதுவாக ஷூவுக்குள் என்ன இருக்கிறது என பார்த்தபோது, உள்ளே நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து போலீசாருக்கும் பாம்பு பிடிப்பவருக்கும் தகவல் கொடுத்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது பாம்பு பிடிப்பவர், நாகப் பாம்பை பிடிக்க முற்பட்டபோது, அது ஷூவுக்குள் இருந்து வெளியே வந்து படமெடுத்து ஆடியது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒருகணம் ஜெர்க்காகினர்.
எனினும், இதையெல்லாம் கண்டு அசராத பாம்பு பிடி வீரர், நாகப் பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்று காட்டில் விட்டார்.
இந்நிலையில், பாம்பு ஷூவுக்குள் இருந்து சீறிக்கொண்டு வந்து படமெடுக்கும் காட்சி வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…