Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விரட்டிய பொதுமக்கள்.. கரண்ட் கம்பியை பிடித்து தாவிய திருடன்.. கடைசியில் தெரியவந்த உண்மை!!

Sekar October 30, 2022 & 18:54 [IST]
விரட்டிய பொதுமக்கள்.. கரண்ட் கம்பியை பிடித்து தாவிய திருடன்.. கடைசியில் தெரியவந்த உண்மை!!Representative Image.

கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் ஒருவர், பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க மின் கம்பத்தில் ஏறி கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த இளைஞரை துரத்தியுள்ளனர்.

இதனால் பீதியடைந்த இளைஞர், பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் ஏறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து, மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர். 

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இளைஞரை சமாதானம் செய்து கீழே இறக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்து, மின் கம்பிகளில் தொங்கியவாறு போக்கு காட்டியுள்ளார். 

எனினும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி, மின்கம்பியிலிருந்த இளைஞரை பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்ததை அடுத்து, இளைஞர் மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்