சென்னை: கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்ததால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீளம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலத்தில் திட்டமிடாமல் அமைத்ததால் ஒதுக்கீடு செய்ததை விட 25%சதவீதம் கூடுதல் நிதி செலவாகிறது. சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குவதால் ரூ.15 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…