கோவை தனியார் நிறுவனத்தின் 3 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏசி எந்திரங்களும் அட்டை பெட்டிகளும் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலை சந்திப்பு பகுதியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒரே கட்டிடத்தில் தனியார் உணவகம், , செல்போன் கடை உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவகத்தின் கட்டிடத்தில் கேஸ் வெல்டிங் பணி செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது, தீப்பொறி பரவி மூன்றாவது தளத்தில் செல்போன் கடைசியின் ஏ.சி இயந்திரத்தில் பட்டது. மேலும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகள் மீதும் தீப்பொறி பட்டு தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு பெரும் புகை மூட்டம் கிளம்ப தொடங்கியது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர். தீயணைப்புத்துறையினர் துரித நடவடிக்கையாமல் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…