ஓமனில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்படத் தயாரானதற்கு முன்னதாகவே தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த 141 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஓமனின் மஸ்கட்டில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், புறப்பட தயாராகி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் விமான போக்குவரத்து ஆணையமான டிஜிசிஏ இந்த நிகழ்வை விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு பயணிகளை அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக பல சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…