சத்தீஸ்கர் மாநிலத்தில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கோமியத்தை கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் இந்துகள் மற்றும் கோவில்களில் பசு மாட்டின் கோமியம் புனிதமானதாக கருதப்படுகிறது. மேலும் வட மாநிலங்களில் பசு கோமியம் சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், அரசு கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் கோமியத்திற்கு 4 ருபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோமிய கொள்முதலால் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…