5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற ஜூலை 26ஆம் தேதி தொடங்க உள்ளநிலையில், 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், அதானி, ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க இருக்கும் இந்த 4 நிறுவனங்களும் டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளன.
அதிகபட்சமாக ஜியோ ரூபாய் 14,000 கோடியும், அதானி நிறுவனம் ரூபாய் 100 கோடியையும் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…