ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை வைரஸ் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசி செலுத்தியது போல குரங்கு அம்மை நோய்க்கும் ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், குரங்கு அம்மை தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் குங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ் நாட்டில் தற்போது வரை கொரொனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை வெளி நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போடியில் கலந்து கொள்ள சென்னை வருவோர்க்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறி உள்ளதா எனத் தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…