Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உ.பி. தலித் மைனர் சகோதரிகள் கொலை.. திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்!!

Sekar September 15, 2022 & 11:41 [IST]
உ.பி. தலித் மைனர் சகோதரிகள் கொலை.. திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்!!Representative Image.

உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் மைனர் சகோதரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள நிகாசன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முறையே 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு தலித் மைனர் சகோதரிகளின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது மகள்களை பைக்கில் வந்த மூன்று பேர் கடத்திச் சென்றதாக சிறுமிகளின் தாய் கூறினார். பின்னர் அருகில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் இருவரும் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமிகளுடன் நட்பாக பழகி வந்த சில இளைஞர்கள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களை பாலியல் பலாத்காரம் இளைஞர்களே தங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிறுமிகள் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இருவரையும் கொன்று, தற்கொலை போல் காண்பிக்க தூக்கில் தொங்க விட்டுள்ளனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சோட்டு என்பவன் முதலில் சிறுமிகளிடம் நெருங்கி பழகி வந்த நிலையில், அவனே சிறுமிகளை மற்ற மூன்று பேருக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்த இடத்தில் அவன் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குற்றத்தைச் செய்த மூவரும், கொலையை மறைக்க அவர்களுக்கு உதவிய  இருவரும் சிறுமிகளின் கிராமத்திற்கு அருகிலுள்ள மற்றொரு மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் ஒருவன் குறித்த அடையாளம் நேற்றே தெரிந்துவிட்ட நிலையில், போலீசார் அவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை என்கவுன்ட்டர் நடத்தி, அவனை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இதையடுத்து தற்போது குற்றத்தில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சோட்டு, ஜுனைத், சோஹைல், ஆரிப், ஹபீஸ் மற்றும் கரிமுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீஸ் வழக்கப்படி உரிய முறையில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்