Latest News in Tamilnadu: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டு காலம் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை ஆனார் பேரறிவாளன்.
கடந்த 31 ஆண்டுகளாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தார் பேரறிவாளன். இவரை வெளியே கொண்டு வருவதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் எனக் கருதி, நளினி, பேரறிவாளன், உட்பட இன்னும் சில பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் தூக்குத் தண்டனை விதித்த இவர்களுக்கு, ஒரு சில விவாதங்கள் காரணமாக ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மனித வெடிகுண்டு மூலம் மரணமடைந்த ராஜிவ் காந்தி கொலை யார் தலைமையில் நிகழ்ந்தது என்பது இன்னும் அறியப்படாத ஒன்று. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் பேரறிவாளனுக்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி முதலில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும் இதற்கு எந்த ஒரு முடிவும் வரவேற்கப்படாத நிலையில், பேரறிவாளன் கடந்த 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தார்.
பேரறிவாளனுக்கு ஆதரவாக, அவரை விடுவிக்கக் கோரி மனு கொடுக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு பரிசீலனையும் செய்யாமல், தள்ளிக் கொண்டே போனது. ஆளுநர் இது குறித்து, எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில், உச்சநீதி மன்றம் இதற்கான தீர்ப்பைக் கூறி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. மேலும், இதனை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ்.அழகிரி அவர்கள், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் அறிவிப்பின் படி, ஏழு பேரை உச்சநீதி மன்றம் கைது செய்தது. ஆனால், தற்போது அதே உச்சநீதி மன்றம் சில சட்ட நுணுக்கங்களைக் கூறி பேரறிவாளனுக்கு விடுதலை அளித்துள்ளது” என்று கூறினார். இதனால், நீதி சாய்ந்து விட்டது எனக் கூறி உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கவில்லை எனக் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…