Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Crime : சட்டக்காலூரி மாணவர் தற்கொலை..? கடைசியாக கிடைத்த கடிதம்..!

Muthu Kumar June 04, 2022 & 18:50 [IST]
Crime : சட்டக்காலூரி மாணவர் தற்கொலை..? கடைசியாக கிடைத்த கடிதம்..!Representative Image.

Crime : சென்னை தரமணியில் படித்துவந்த சல்மான் என்ற 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த 19 வயதான சல்மான் என்ற இளைஞர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சல்மான் தனது சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பியுள்ளார்.  

இந்நிலையில், நேற்று இரவு கல்லூரியில் இருந்து விடுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது கல்லூரி அருகே தங்கி இருந்த விடுதியின் அறையில் சல்மான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சல்மானுடன் விடுதி அறையில் தங்கியிருந்த சக மாணவர்கள் வெளியில் சென்று திரும்பிய போது சல்மான் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சல்மானின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், சல்மானின் அறையில் ஒரு கடிதம் கிடத்துள்ளது. அதில்,  “மரணத்துக்குப் பின்னர் என்ன நடக்கும் என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அம்மாவுக்காக 5000 ரூபாய் சேமித்து வைத்துள்ளேன்” என இருந்துள்ளது. மேலும் மாணவரின் இந்த தற்கொலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்