Tamilnadu News Live : தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதற்க்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக 2018ம் ஆண்டு அதிமுக அரசு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டப்ன. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் இருந்து அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்துப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த வகுப்புகள் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…