Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cuddalore Latest News : கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை..!

Muthu Kumar June 07, 2022 & 13:30 [IST]
Cuddalore Latest News : கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை..!Representative Image.

Cuddalore Latest News : கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு குடும்ப தேவைக்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். 

இந்நிலையில் அந்த கடனை 2 தவணைகளாக செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, காவலர் செல்வகுமார் வாங்கிய கடன் தற்போது வட்டியுடன் 12 லட்ச ரூபாய் தர வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். மேலும் பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். 

இதுகுறித்து புகார் எழுதிய செல்வகுமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அதை கொடுக்க சென்றுள்ளார். அப்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலே மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் விஷம் அருந்தியதால் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. 

மேலும், கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்