இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்பதால் போலி வாக்காளர்களை ஒழிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அவர்கள் கூறிம்போது, “தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது, இடம் மாறி குடியேறிவர்களின் போன்ற விவரங்கள் மாறாமல் இருப்பதால் தேர்தல் ஆணையத்துக்கு பெரிய சவாலாக உள்ளது.
இதனையடுத்து, இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யும் விதமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, தமிழகத்திலும் இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக தயாரிக்கப்பட்ட 6பி என்ற படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…