சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், 5 தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறும் வகையில் 75 கி.மீ தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அத்தியாவசியப் பொருள் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…