பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது கொள்கைகள் நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பு மற்றும் அவரது கட்சியில் கிளர்ச்சியைத் தூண்டிய நிலையில், பதவியேற்ற ஆறே வாரத்தில் பதவி விலகியுள்ளார்.
ஒரு நாள் முன்னதாக டிரஸ் நேற்று பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என உறுதியளித்திருந்தார். ஆனால் டிரஸ் தனது பல பொருளாதாரக் கொள்கைகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பதவி விலகினார்.
முன்னதாக பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ஆட்சியில் மற்றும் கட்சியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். அதையடுத்து புதிய பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ் மற்றும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இறுதி சுற்று வரை போராடிய நிலையில், லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார்.
இந்நிலையில், அவர் தனது பொருளாதார கொள்கைகளால் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், பிரதமர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…