செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை to திருச்சி நெடுஞசாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கோர விபத்தில் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார், மீட்கப்பட்ட அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
மேலும் விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, முன்னே இரும்பு லோடை ஏற்றிச் சென்ற லாரியை முந்த முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் பேருந்தில் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்த நிலையில், அந்த பக்கத்தில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…