கூகுள் மேப் உதவியுடன் கடலூரில் இருந்து புறப்பட்ட கனரக லாரி ஒன்று பெங்களூருவுக்கு பதிலாக பேருந்து நிலையத்திற்குள் சிக்கிக் கொள்ள இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து ரசாயனங்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரு புறப்பட்ட கனரக லாரியை சங்ககிரியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர் கடலூரில் இருந்து பெங்களூருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பினை தனது செல்போன் மூலம் பெங்களூரு செல்வதற்கான வழியை தேர்வு செய்துள்ளார்.
திருப்பாதிரிப்புலியூர் வந்த கனரக லாரி அண்ணாபாலம் வழியாக செல்லாமல் பேருந்து நிலையத்தின் வழியாக இலகுரக வாகனங்கள் செல்லும் லாரன்ஸ் சாலையை காட்டியுள்ளது. இதனால் அவரும் லாரியை லாரன்ஸ் சாலை பக்கம் திருப்பியுள்ளார். இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் ரயில்வே சுரங்கப்பாதையில் மோதி லாரி நின்றிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு ஆட்டோக்காரர் தான் ஆபத்பாந்தவனாக வந்து வழிகாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…