விஜயநகரா மாவட்டம் கானஹொசஹள்ளியை அடுத்த கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு. அவரும் அதே கிராமத்தை சேர்ந்த நிர்மலாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். போஜராஜுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண் கூறியுள்ளார். ஆனால், காதலன் 3 மாதங்களுக்கு முன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனை அறிந்த நிர்மலா போஜராஜுவை அடிக்கடி சந்தித்து தகராறு ஈடுபட்டு வந்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று நிர்மலா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலையை தனியாக துண்டித்து அதை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை தட்டிக்கேட்ட பெண்ணை கொலை செய்து தலையை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…