Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்.. திருப்பூரில் பகீர்!!

Sekar September 07, 2022 & 17:01 [IST]
சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்.. திருப்பூரில் பகீர்!!Representative Image.

திருப்பூரில் 17 வயதேயான சிறுமி ஒருவரை காவலர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு முடித்து விட்டு இந்த ஆண்டு கல்லூரில் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவியிடம் விசாரணை நடத்தியதில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்புதூரை சேர்ந்த மாரிச்செல்வன் என்பவருடன் இந்த சிறுமி 4 வருடங்களாக பழகி வந்ததும், மாரிச்செல்வன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

சிறுமியிடம் மேலும் விசாரணை நடத்தியதில், திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக இருக்கும் யுவராஜ் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாரிச்செல்வன் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்  உத்தரவின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்