சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தலைமையேற்று இந்த விழாவை நடத்தவுள்ளார், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவானது பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது. மேலும் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்துரை வழங்கவுள்ளதாக தெறிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக 24 மசோதாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரும் ஆளுநரும் பங்கேற்கும் இந்த பட்டமளிப்பு விழாவானது நடைபெறுகிறது. மேலும் தமிழக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசிடம் திமுக ஊட்டிட பிறகட்சிகள் அனைவரும் போராட்டங்கள் நடத்திய நிலையில் இந்த விழாவானது நடைபெறுகிறது. மேலும் சட்டசபையில் ஆளுநருக்கெதிரான மசோதாவும் நிலைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி,பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி, தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொள்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…