Thirunelveli Stone quarry accident : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியான நிலையில், நேரடியாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மற்றும் சபாநாயகர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்குவாரி விபத்து
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள கல்குவாரி ஒன்றில், நேற்று இரவு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பாறை சரிந்து விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கிய 2 பேர், உயிருடன் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், கல்குவாரியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கல்குவாரி அனுமதியின்றி முறைகேடாக இயங்கி வந்ததாக கூறப்படும் நிலையில், குவாரி உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் ஆவேசம்
நேற்று இரவு நடந்த சம்பவத்திற்கு இன்று மாலையில் பார்வையிட வந்தது எதற்காக என கொந்தளித்த அந்த பகுதி மக்கள், அரசியல் செய்யத்தான் வந்துள்ளீர்களா என ஆவேசத்துடன் கேட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அனுமதியின்றி இயங்கிய குவாரியின் உரிமையாளர் மற்றும் இதில் தொடர்புடைய கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உள்ளூர் மக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி காரை விட்டு இறங்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் சபாநாயகர் அப்பாவு சம்பவ இடத்திற்கு நடந்தே சென்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…