மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாட்டுக்கொரு புலவனின் புகழ் பாரெங்கும் பரவச் செய்வோம் எனக் கூறி பாரதியாரை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் முக்கியமானவர் மகாகவி பாரதியார். தனது பாடல்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேள்வித்தீயை ஊட்டிய அவரது பிறந்த தினம் இன்று.
அதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி 14 அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகமெங்கும் கொண்டாடியதன் முத்தாய்ப்பாக, வாரணாசியில் அவர் வாழ்ந்த இல்லத்தைப் புனரமைத்து அவரது பிறந்தநாளான இன்று திறந்துவைத்தேன்!
பாட்டுக்கொரு புலவனின் புகழ் பாரெங்கும் பரவச் செய்வோம்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதே போல் பிரதமர் மோடியும் பாரதியாரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மத்திய வெளியுறவு அமைச்சராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், காசியில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…