மகாராஷ்டிரா மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, இந்த முடிவின் மூலம் அரசின் கருவூலத்துக்கு ரூ.6,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் நலனுக்கான சிவசேனா-பாஜக அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியே இந்த முடிவு என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.
முன்னதாக கடந்த வருடம் தீபாவளியின்போது மத்திய அரசு வரியைக் குறைத்த பிறகு பல்வேறு மாநிலங்களும் வரிக்குறைப்பை மேற்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் அரசியல் காரணங்களை கூறி வரிக்குறைப்பு செய்யவில்லை.
அதில் மகாராஷ்டிராவும் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளதால் வரிக்குறைப்பு செய்யப்பட்டு மக்களுக்கு விலை குறைவாக பெட்ரோல், டீசல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…