தெற்கு டெல்லியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஒரு உணவகத்தில் மோமோஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவரின் தொண்டையில் மோமோஸ் சிக்கியிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லச்சத்தில் ஒருவர்தான் இந்த மாதிரி உணவு தொண்டையில் சிக்கி உயிரிழப்பர் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…