மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை மீனவர்கள் கடலுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தருவைகுளம் பெரியதாழை புன்னக்காயில் வேம்பார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் 3000 ஆயிரத்திக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பைபர் படகுகள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 50,000 மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ஏற்படும் மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனடியாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி என்1077, வாட்ஸ்ஸப்என்-9486454714, தொலைபேசி எண் 0461-2340101 ஆகிய எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…