உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், கல் அகற்றும் அறுவை சிகிச்சை என்ற பெயரில் ஒருவரின் இடதுபக்க சிறுநீரகத்தை தனியார் மருத்துமனை டாக்டர்கள் திருடியிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சந்திரா என்ற 53 நபர் வீட்டுக் காவலராக பணிபுரிந்துவருகிறார். இவர் சில நாட்களாகவே அடிவயிற்றில் கடுமையான வலி இருப்பதையடுத்து, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் அவருடைய இடது பக்க கிட்னி திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
அதாவது, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த சுரேஷ் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அலிகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு, அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருடைய இடது பக்க சிறுநீரகத்தில் கல் இருப்பதாக டாக்டர்கள் கூறியதையடுத்து, ஏப்ரல் 14 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது, அவருடைய சிறுநீரகத்தில் உள்ள கல் அகற்றப்பட்டுவிட்டதாக டாக்டர்கள் கூறி மேலும் சில மருந்து மாத்திரகளை கொடுத்து ஏப்ரல் 17 ஆம் தேதி மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மீண்டும் ஸ்கேன் செய்துபார்த்தபோது தான் அவருடைய சிறுநீரகமே இல்லை என்ற ஷாக் செய்தியை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுரேஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும், மயக்கநிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…