கர்நாடக மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில், பிரேத கல்யாணம் என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வித்தியாசமான சடங்கு முறை கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் நடைபெறுவது வழக்கம்.
மேலும், சிறு வயதில் உயிரிழந்தவர்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யும் விதமாக இத்திருமணம் சடங்கை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று நடைபெற்ற பிரேத திருமணம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…