Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உ.பி.யை விட...நாங்க அவங்களைவிட அதிகமா என்கவுன்டர் பண்ணுவோம்...பாஜக அமைச்சர்.!

madhankumar July 30, 2022 & 18:12 [IST]
உ.பி.யை விட...நாங்க அவங்களைவிட அதிகமா என்கவுன்டர் பண்ணுவோம்...பாஜக அமைச்சர்.!Representative Image.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த கொலை சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவதை போன்று நாங்களும் பயன்படுத்துவோம் என கூறினார்.  கர்நாடக முதல்வரின் இந்த பேச்சு ஏற்கனவே அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணணும் இதேபோன்ற கருத்தை பேசியிருப்பது கர்நாடகாவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அவர் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உத்தர பிரதேச மாதிரிகளை பயன்படுத்தப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். நாம் ஏன் உத்தர பிரதேசத்தை பின்பற்ற வேண்டும். இவர்களை விட ஐந்து மடங்கு சென்று குற்றத்தில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்யலாம். இப்போது இதான் இப்படியான சம்பவங்கள் நடக்காது" என தெரிவித்துள்ளார்.  இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்