தெலுங்கானா மாநிலத்தில் எதிர்பாராத விதமாக கார் கேரேஜில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் LB Nagar-ல் உள்ள ஒரு கார் கேரேஜில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. உடனே தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். மேலும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீ பற்றி எரிய தொடங்கிய நேரத்தில் அந்த கேரேஜில் மொத்தம் 15 காருக்கு மேல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…