சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது, நேரடி வெயிலில் செல்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதனால், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கழிக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 22 முதல் 25 வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் நாளான இன்று, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இதனால், இங்கு அதிக வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…