காந்திநகர்: குஜராத்தை அச்சுறுத்தும் பைபோர்ஜாய் புயல் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பைபோர்ஜாய் புயல், அதி தீவிர புயலாக மாறி குஜராத்-பாகிஸ்தான் இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கவுள்ளது. இந்த புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வானிலை மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பைபோர்ஜாய் புயல் எந்த பாதையில் கடக்கும், புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…