ஹரியானா மாநிலத்தில் குறுகிராம் என்னும் பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவளின் தந்தை மற்றும் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி வகுப்பில் ஒரு மாறியாக இருந்ததால் சந்தேகப்பட்ட ஆசிரியர் என்ன பிரச்சனை என்று விசாரித்தார். பின்னர் அந்த மாணவி லைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சொன்னதற்கு பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு இந்த தகவலை தெரிவித்தனர். பிறகு வந்த போலீஸாரிடம் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்ததாகவும், இந்த விஷயத்தை வெளியே யாரிடம் சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர் என்று அந்த மாணவி வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் தந்தை மற்றும் சகோதரரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் அறிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…