Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை தொடங்கும் உச்சி மாநாடு....பைடனுடன் பங்கேற்கும் மோடி..!

madhankumar July 13, 2022 & 11:12 [IST]
நாளை தொடங்கும் உச்சி மாநாடு....பைடனுடன் பங்கேற்கும் மோடி..!Representative Image.

இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளும் 'ஐ2யு2'  அமைப்பில்  இணைந்துள்ளன. இந்த அமைப்பில் உள்ள 4 நாடுகளும் இணைந்து, நீர், எரிசக்தி, விண்வெளி, போக்குவரத்து, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீடு செய்யவுள்ளனர், இதனை ஊக்கப்படுத்துவதற்கே இந்த மாநாடானது நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பில் முதல் மாநாடு காணொளி காட்சி மூலம் நாளை (ஜூலை 14) ஆண்டு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா சார்பில் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். 

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் வர்த்தகம், முதலீடுகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், பிற பொதுவான பிரச்சனைகள்  குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்