குஜராத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழை காரணமாக குஜராத், மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில் குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மழை காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடம் மேலாண்மை அமைச்சர், ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…