உலகம் முழுவதும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மொத்தமாக 58 நாடுகளில் இந்த குரங்கு அம்மை பரவியுள்ளது. 6000க்கும் மேற்பட்டோர் இந்த குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குரங்கம்மை வேகமாக பரவி வருகிறது, இதனால் 6000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் பாதித்தவா்களை கண்காணித்தல், அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.
மேலும் இந்த நோய் கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை. ஆனால் வளா்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…