பொன்னமராவதி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு தாயும் எட்டு வயது சிறுவனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பொன்னமராவதியில் வீட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதி தான் வீரானந்தம் - ஜெயபாரதி. இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளது. வீரானந்தம் வெளிநாட்டில் சுமார் 3 வருடங்கமாக பணி புரிந்து வருகிறார். ஆனால் அவரோ குடும்ப செலவுக்கு எந்த பணமும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரத்திற்கு ஜெயபாரதியும் அவர்களின் மகனும் கஷ்டப்படுவதாக கூறியுள்ளனர். எனவே, தீராத மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயபாரதி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில், "என்னுடைய இந்த முடிவிற்கு யாரும் பொறுப்பில்லை. என்னுடைய குடும்ப சூழ்நிலை, உடல்நலக் கோளாறு, மன அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். நாங்கள் இறந்த உடன் என்னுடைய கணவரிடமோ, தந்தையிடமோ கொடுக்க வேண்டாம். இறந்த பிறகும் நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை. எங்களுக்கு திருமண ஆனா 8 வருடங்களில் எனக்கு கணவராவோ, என்னுடைய மகனுக்கு தந்தையாகவோ அவர் எதுவும் செய்யவில்லை. என்னுடைய மகனிடம் நீ அப்பாவுடன் இரு என்ற போது, இல்லை அம்மா நான் உங்களோட இருக்கிறேன் என்று, என்னுடன் விஷம் பருகிவிட்டான். இந்த வீட்டில் இருந்து ஒரு சின்ன குண்டூசி கூட கணவரிடமோ, தந்தையிடமோ போக கூடாது" என்று மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…