தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் 58 வயது அன்பழகன். இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும் ராணியின் தாயர் ?(65) அவரும் இவர்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் ராணிக்கு அவரது கணவர் அன்பழகனுக்கு அடிக்கடி தகராறு நடந்தவண்ணம் இருந்துள்ளது, இதனால் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ராணியையும் அவரது தாயையும் காணவில்லை என்று அன்பழகன் வீடு முழுவதும் தேடிக் கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் ராணி தனது தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அன்பழகன் குடும்பத்தினரிடையே விசாரணை நடத்திவருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக தாயும் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…