காயிதே மில்லத்தின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, தயாநிதிமாறன், துரைமுருகன் ஆகியோர் மரியாதையை செலுத்தினர். மேலும் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அக்கட்சி நிர்வாகிகளுடன் வந்து காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…