கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் பிந்து. இவருக்கு விவேக் என்ற இருக்கிறார். இந்நிலையில் பிந்து தனது கணவர் கொடுத்த ஒத்துழைப்பின் பேரில் அரசு தேர்வுக்கு படித்து தேர்வுகள் எழுதி வந்துள்ளார்.
பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராகயும் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி படிப்பு முடித்த நிலையில் அரசு தேர்வுகளை எழுத தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இருவரின் ஆர்வத்தை அறிந்த பிந்துவின் கணவர், பிந்துவையும், விவேக்கையும் அதற்கான பயிற்சி மையத்தில் சேர்த்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.
பிந்துவும் தன் மகனும் ஒன்றாக இணைந்து பயிற்சி மையத்திற்கு சென்று ஒன்றாக படித்து தேர்வும் எழுதியுள்ளனர். இதில் அதிசயமாக தாயும் மகனும் ஒன்றாக தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதுகுறித்து விவேக் கூறும் போது, நானும் எனது தாயும் ஒன்றாகவே பயிற்சி மையத்திற்கு சென்றோம் படித்தோம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செலவுகள் அனைத்தையும் எனது தந்தை செய்தார் எனவும் எங்களது ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்து எங்களை வழி நடத்தினார்கள். இருவரும் ஒன்றாக படித்து ஒன்றாக தேர்வெழுதி தற்போது ஒன்றாகவே வெற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளார்.
இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது, எனது தந்தைக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என கூறியுள்ளார். வயது படிப்பிற்கு ஒரு தடை இல்லை என நிரூபிக்கும் வகையில் பிந்து இந்த தேர்வு வெற்றிபெற்றுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…