தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் சக பள்ளி தோழர்கள் மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, படித்து வரும் பள்ளியில், அதே பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனின் பிறந்தநாள் விழா கடந்த மே மாதம் நடந்துள்ளது. அதில் மாணவி கலந்துகொண்டுள்ளார். மேலும் மாணவி அந்த 12 ஆம் வகுப்பு மாணவருடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பிறந்தநாள் பார்ட்டியின்போது இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்ததை மாணவியின் வகுப்புத் தோழர்கள் 3 பேர் வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் காட்டி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மாணவியை தனிமையில் அழைத்து, மூன்று பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்தோடு நிற்காமல் இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தையும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை மாணவியின் காதலர் எனக் கூறப்படும் 12 ஆம் வகுப்பு மாணவருக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன சிறுமி பள்ளிக்குச் செல்லாமல், தன்னை வேறு பள்ளிக்கு மாற்றும்படி பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். பெற்றோர் தொடர்ந்து விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவர, மூன்று மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…