தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், நிஜாம் சாகர் மண்டலம், அச்சம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொட்டு சங்கர். இவரின் மகள் கீர்த்தனாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பண்டாரி என்ற நபருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவரின் குணம் தெரியவந்துள்ளது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துகொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவரை அழைத்துச்சென்று ஹைதராபாத்தில் தனிக்குடித்தனம் இருந்துள்ளார். சிறிது நாட்களிலேயே அவரது மாமியார் விவசாய வேலை ஒருப்பதாக கூறி அழைத்துள்ளார்.
அங்கு சென்ற கீர்த்தனாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுமட்டுமில்லாமல், அவரை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கீர்த்தனா மருத்துவமனையின் அனுமதிக்கப்படும். மேலும் கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமியாரை கைது செய்த போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…