Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்ப பிரச்சனையில் குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்....மரண வாக்குமூலத்தின் பின்னணி..!

madhankumar June 23, 2022 & 10:43 [IST]
குடும்ப பிரச்சனையில் குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்....மரண வாக்குமூலத்தின் பின்னணி..!Representative Image.

புவனகிரி அருகே, பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினையில் விஷம் கலந்து கொடுத்ததாக தாய் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

புவனகிரி அருகே சி.ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவருடைய மனைவி பரணி (24), இவர்களுக்கு இனியா (8), பரணிதரன் (6) என்று 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 18 ஆம் தேதி பரணி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் சாம்பார் சத்தம் மற்றும் தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு, பலாப்பழம் மற்றும் குளிர்பானம் குதித்துள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மூவரையும் மீது உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் இருந்த பரணீதரன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து அவனது தாய் பரணி மற்றும் சகோதரி இனியா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் பரணியும் உயிரிழந்தார். பரணி உயிரிழப்பதற்கு முன்னர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் திடுக்கிடும் உண்மையை கூறியுள்ளார். அதாவது பயணிக்கும் அவரது கணவரான வேல்முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. 

முதலில் பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்தனர் என நினைத்துவந்த நிலையில் தாயின் இந்த மரண வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகள் இனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்