மகாராஷ்டிரா மாநிலம் மாலாட் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான ஜோதிராம் பாபுராவ் மன்சுலே. இவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் தாம் டெலிவரிக்கு செல்லும் வீடுகளில் பெண்கள் ஆர்டர் செய்திருந்தால், அவர்களின் செல்போன் நம்பர்களை தனியே எடுத்து தன்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர், அந்த பெண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மாலாட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதோடு வீடியோ கால் செய்து அந்தரங்க உறுப்பை காட்டி தொல்லை செய்துள்ளார். இதனால், அதிர்ந்துபோன அந்த பெண் காவல்துறையில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் ஜோதிராமை கைது செய்துள்ளனர். பின்னர், அவருடைய போனை பரிசோதனை செய்ததலில் இதேபோல் 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…