பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஒரு முஸ்லீம் பெண் 15 வயதாகும் போது, தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இது குழந்தை திருமண தடைச் சட்டத்தை மீறாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.
16 வயதுடைய ஒரு சிறுமியை குழந்தை பராமரிப்பு நிறுவனத்திடம் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி, சிறுமியை திருமணம் செய்த 26 வயதான ஜாவேத் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்த திருமண சட்டப்பூர்வமானது என்று நீதிமன்றம் தீர்மானித்தது.
மனுதாரரின் வழக்கில், அவரது மனைவியுடனான அவரது திருமணம் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் நிறைவேறியது மற்றும் இரு தரப்பினரும் முஸ்லிம்களாக இருந்ததால், மணப்பெண் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தாலும், அது திருமணம் அங்கீகரிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…