லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி ஜனநாயகத்தை மியான்மரில் மீட்டெடுத்தலும், பின்னர் மீண்டும் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ராணுவம் அடுக்கடுக்காக 18 குற்றங்களை சுமத்தியுள்ளது.
சூ கி தன் மீதான குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்றும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் மறுத்துள்ளார். அவர் தலைநகர் நய்பிடாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது வழக்குகள் மூடப்பட்ட நீதிமன்றங்களில் நடத்தப்பட்டன.
சமீபத்திய குற்றச்சாட்டுகள் சூ கி ஒரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானவையாகும். இதில் சூ கி'க்கு மூன்று ஆண்டுகள் சிறை தனனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…