சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐநா தலைமையகத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையேற்கவுள்ளார்.
யோகா பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை, யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, வரும் 21ம் தேதி 9-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் அன்றைய தினம் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின அமர்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுக்குப்பின், ஐ.நா.சபையில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலையைமையேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் ஜூன் 21-ம்தேதி காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறுகிறது. அதில், ஐ.நா. உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க அதிபர்ஜோ பைடன் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா.சபையில் நடைபெறும் யோகா அமர்வு நிகழ்ச்சிக்குப்பின், வரும் 22-ந் தேதி, நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் அன்றிரவுவ பிரதமர் மோடிக்கு, அதிப்ர் ஜோ பைடன் விருந்து அளிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…