டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து நடைபெறும் என அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடர், பார்லிமென்டின் பழயை கட்டடத்தில் துவங்கும் எனவும், பாதியில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
23 நாட்கள், 17 அமர்வுகளாக நடக்கும் இந்த கூட்டத்தில், டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான சட்டம், தேசிய ஆராய்ச்சி நிறுவன மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த கூட்டத்தொடர் வருகின்ற 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…